Thursday, 15 September 2016

Naga Vamsa Kshatriyas-Vanniyar

Nagavamsa Kshatriyas played vital role in the Indian history.  They claim to belong to the Nagavamsa, (i.e) Naga (Cobra) race and the Kasyapa Gotra.  Several records of them reveals about their exact history and also paved the way to identify about their community to which they belonged.  They claim that, they belongs to "Agni Kula Kshatriyas" (i.e) "Vanniya Kula Kshatriyas".  

Nagavamsi Kshatriyas had more branches such as "Bastar Chhindaka Family", "Sindha Family of Yelburga",  "Bagaklot Branch" etc.  They used both "Nagari" and "Telugu" characters as their languages. 

Narayanpal stone inscription (1111 A.D) of queen "Gunda Mahadevi", the mother of "King Somesvaradeva", records the grant of village Narayanapura to the god Narayana and the god Lokesvara.   Narayanpal is a village 23 miles north-west of Jagdalpur the capital of the Bastar feudatory state attached to the Chattisgarh Division of the central provinces.  It is situated on the river bank Indravathi, one of those minor rivers of India.

The donor was "Gunda Mahadevi", the chief queen of the "Maharaja Dharavarsha", the mother of the "King Somesvaradeva" and grandmother of "King Kanharadeva", who was then ruling after the death of his father.  The chief queen "Gunda Mahadevi" granted the village Narayanapura during her grandson's reign in the year 1111 A.D.

The dynasty claims to be "Nagavamsi of Kasyapa Gotra" and to have a tiger with a calf as their crest and to be the "Lords of Bhogavati", the best of cities.  Bastar Nagavamsi Kings were closely associated with the Sindha Family of Yelburga.  The birudas of the two families are strikingly similar.  The Sindas also claims to be "Nagavamsodbhava", born of the race of the Naga (Cobra) and the "Lord of Bhogavati".  The Narayanpal stone inscription states as follows :-

"(Line, 1 - 6), Hail - The Patta Mahadevi of the Maharaja Dharavarsha Deva, who was born of the Nagavamsa, resplendent with the mass of rays of thousand hood  jewels ; who was the lord of Bhogavati, the best of towns ; whose crest was a tiger with a calf ; who was of the Kasyapa Gotra".  (Epigraphia Indica, Vol - IX, page - 315).

"(Line, 12 - 17), After the Maharaja Somesvaradeva, who was known as her son ; who was born of the Nagavamsa, resplendent with the mass of rays of thousand hood jewels ; who was the lord of Bhogavati, the best of town ; whose crest was a tiger with a calf ; who was of the Kasyapa Gotra".  (Epigraphia Indica, Vol - IX, page - 316).

The Rajapura copper plate of the King Madhurantaka Deva mentions about the village Rajapura, which was granted by him in the year 1065 A.D.  The Rajapura village is still now situated in Jagdalpur, the capital of Bastar, on the bank of the Indravati River.  The copper plate mentions the name "Madhurantakadeva", "Prince Kanharadeva", "Queen Nagala Mahadevi", "Prince Nayaka", "Nayaka Sudraka", "Prince Tungaraja" and "Sreshthin Puliama".    The copper plate (1065 A.D) further specifies that, the King Madhurantaka Deva belonged to the Chhindaka Family of the Naga (Cobra) race.  Therefore, the Bastar Nagavamsi Kings belongs to Chhindaka Family.

The King Madhurantaka Deva's, Chhindaka Family is one among the 36 Agni Kulas mentioned by Chand Bardai, the Court Poet of King Prithviraja.  (Prithviraja Raso, Canto 1, Page-54, Nagari Pracharini Granthamala Series). 

Therefore, it is very clear that, the Nagavamsi Kshatriyas hails from "Agni Kula Kshatriyas Community" (i.e)  "Vanniya Kula Kshatriya Community".

Another stone inscription is situated in Sunarpal, which is 10 miles of Narayanpal.  The inscription states about the gift made by "Mahadevi", the chief queen of the "King Jayasimhadeva" of the Naga (Cobra) Race, the supreme Lord of Bhogavati, having the tiger with a calf as crest (symbol).  The king is called "Rajadhiraja Maharaja Sri Jayasimhadeva".

Barsur inscription (1108 A.D) of "Ganga Mahadevi", the chief queen of "Nagavamsi Kshatriya King Somesvaradeva", is now in the Nagpur Museum.  The inscription in the Telugu character and the language is also in Telugu prose.  The titles of the King is mentioned in Sanskrit, which is almost same as Narayanpal Sanskrit inscription.  The inscription records the gift of a village to two siva temples, which was built by the chief queen Ganga Mahadevi.

The Dantesvari Gudi Telugu inscription (1218 A.D), of the Nagavamsi King Narasimhadeva states that, "Maharaja Narasimadeva", the ornament of the race of the best of serpents was ruling.  (Sri - bhujaga - vara - bhushana - Maharajul = aina Sriman - Narasimhadeva - Maharajula Rajyamu).   

The Nagavamsi Kshatriya King's origin is from Andhra Pradesh is well established with the help of inscriptions.  They belong to "Agni Kula Kshatriya Community" (i.e) "Vanniya Kula Kshatriya Community".  Several branches of the Nagavamsa Kshatriyas ruled many parts of the present Andhra Pradesh, Maharashtra and Chattisgarh.

Ramtak in the Nagpur District, five miles from this place there is a village called Nagardhan, which was known as Nandivardhana in olden times, and local traditions assert that the surrounding country was ruled from that place by Kshatriya Rajas.

The "PALEWARS", the "Agni Kula Kshatriya Pallis" are still living in Nandivardhan (Nagardhan) from ancient times.  They had migrated from Andhra Pradesh to Nandivardhan (Nagardhan) during the period of Agni Kula Kshatriya Kings such as "Nagavamsa Kshatriyas" and "Vakatakas".

The Nagavamsa Kshatriya Kings were also mentioned in the sangam age Tamil Literature.  The "Perumpaanaatrupadai" (2nd century B.C) mentions about the king, "Tondaimaan Ilantiraiyan", who born to Cholas and Naga Princess.  The Tamil Language term, "Tondaiman" and "Kadavas" clearly denotes to Pallava Kings.

Similarly, another ancient Tamil Literature, the "Manimegalai" speaks about the relationship between Nagas and Cholas.  The early Pallavas had the matrimonial affairs with the "Chutu Nagas" of Andhra Pradesh.  The Pallava King Sivaskanda Varman was called as "Siva Skanda Naga Sri" in the Banavase inscription (Contribution of South Indian to Indian culture, page - 13, S.K. Ayengar).  The saint "Thirumangai Azhwar" of 8-9 th century A.D. states that, the Pallava Kings had the "Serpent - Banner" :-

"தேம்பொழில் குன்றையில் தென்னவனைத் 
திசைப்பதிச் செருமேல் வியந்து அன்று சென்ற 
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த  
பரமேச்சுர விண்ணகரம் அதுவே"

The Pallavas (Kadavas) are "Vanniya Kula Kshatriyas" (i.e) "Agni Kula Kshatriyas".  The Kadavas mentioned in the Cholas inscriptions as "Pallis" (Vanniyas) by caste.  They had very close matrimonial affairs with the Cholas.  

The Vanniya Kula Kshatriyas still have the name "Nagavada Palli" in the Dharmapuri Region of Tamil Nadu.  The Vanniya Kula Kshatriya Royal Kings of Udaiyar Palaiyam Zamin clearly mentioned in their Genealogical tree that, the "Zamin Family of Udaiyar Palaiyam of Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire)".  This proves that, the "Fire Race of Kings" existed through out India.

The pride history of "Nagavamsi Kshatriyas" reveals that, they not only ruled the "Tamil Nadu" and "Andhra Pradesh"  but also ruled the parts of "Maharashtra" and "Chattisgarh".  The name "Nagpur" might have derived from the term "Nagavamsi Kshatiyas".  Moreover, the "Agni Kulas" not only to "Southern India" but also to "Northern India".  They all are comes under the clans of Kshatriyas (i.e) the family of the God of Fire.

----- xx ----- xx ----- xx -----
Thanks:N.Murali Naicker

இலக்கியங்களில் வன்னியர்

The Sangam  Literature, "Pathitru Pathu" (பதிற்றுப் பத்து) refers about "Vanniya Mandram" (Kings Burial Place).  During cholas time, the "Kings Burial Place" has been referred as "Palli Padai Koil" :-


"மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விழங்கிய காடே"  


திரிகடுகம், நல்லாதனார், பாடல்-46  says the following :- 


"கால் தூய்மை இல்லாக் கலிமாவும் காழ்கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங்களிறும் சீறிக் 
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இம் மூன்றும்
குறுகார் அறிவுடையார்"
     

The Sangam Age Literature "Thirikadugam" refers about "Palli".   The poet compares the Vanniyas "Valours/Powers" at par with "Horses" and "Elephants", which were used in the battle fields.   The poet further says about "Warriors Attitude".  Such "Attitude" (Kshatriyas Attitude) was mandatory in those days to conquer many victories.  During imperial cholas time, we have the names such as "Vettung Kai Azhagiya Kachiyarayar" (வெட்டுங்கை அழகிய கச்சியராயர்),  "Atkolli Kadavarayar" (ஆட்கொல்லி காடவராயர்), "Val Valla Peruman" (வாள் வல்ல பெருமான்) etc.   


மன்னர்கள் தமது முன்னோர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் எழுப்பினர்.  இவற்றில் வழிபாடுகளை கூட அவர்கள் நடத்தினர்.  இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு "கோட்டம்" எனவும் "பள்ளி வாயில்" எனவும் பெயர் வழங்கப்பெற்றது :- 


"இந்த ஈமப்புறங்காட்டு அரசர்க்கமைந்த ஆயிரம் கோட்டம்"   (மணிமேகலை, வரிகள் - 165 & 166).


"ஓதுக்கின்றிணி புதுப் பூம்பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை விழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"     (புறம் 33 : 20 -22)


விளக்கம் :  ஒவ்வொரு பள்ளி மாடத்துக்கும் சென்று சோழ மன்னன் நலங்கிள்ளி வழிபாடு செய்தான் என்று புறநானூறு கூறுகிறது.   "பள்ளி மாடம்" என்பது அரச குலத்தோரின் சமாதி.  "பள்ளி" என்ற சொல் அரச குலத்தில் வழங்கப்பட்டு வந்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.     



"வன்னி" எனில் "மன்னன்" :-


கல்லாடனார் என்ற பழம்பெரும் தமிழ்ப் புலவர் "கல்லாடம்" என்ற அற்புதமான இலக்கியத்தைப் படைத்து  இருக்கிறார்.  திருவள்ளுவரின் காலத்து இலக்கியமாக "கல்லாடம்" கருதப்படுகிறது.  இதில் "அரசன்" என்று குறிப்பிட "வன்னி" என்ற சொல்லையே கல்லாடனார் பயன்படுத்தி இருக்கிறார்.   


"கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டியாய பன்னிரண்டினைச்
செங்கோல் முளையிட் டருணீர் தேக்கிக் 
கொலைகள வென்றும் படர்களைக் கட்டுத் 
திக்கு படரானை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கும் 
நாற்படை வன்னியராக்கிய பெருமான்"  


விளக்கம் :  பன்னிரண்டு பன்றிக் குட்டிகளை நாற்படை வன்னியராகச் சிவபெருமான் படைத்தார் என்கின்றது கல்லாடம்.  இவ்வுலகில் தருமம் என்னும் பயிர் தழைத்து ஓங்கும் வகையில் நால்வகை சேனைகளுடன் வன்னியர்களை உண்டாக்கிய கடவுள். பன்னிரண்டு பன்றிக் குட்டிகள் என்பது வேளிர்களை குறிப்பதாகும்.


மகாபாரதம், ஆதிபருவம், 169-வது ஸ்லோகத்தில், "யாகசேனர் இயற்றிய வேள்வித்தீயினின்றும் 'திருஷ்டத்யும்மனும்', 'திரௌபதியும்' தோன்றினர்" என்று கூறப்பட்டுள்ளது.    வில்லிபுத்தூரார் மகாபாரதமும், எங்கள் குல திரௌபதியை "வன்னியில் பிறந்த மாமயிலும்" என்று குறிப்பிடுகிறது.        


மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-


"ஓ அக்கினியே  !  நீதான் இரண்டு 
அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !
நீயே சூரியன்  !  நீயே சந்திரன்  !
நீயே வாயு  ! "


மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-


"அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்
சம்புமக்நி  மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "            


விளக்கம் :  வேதத்தில் மிகவல்ல  பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.   


தமிழ் பாகவதம் 8-வது காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி :-


"இயம்பு இரண்டாம் சீர் மனுவினை உரைக்கின் 
இலங்கும் அக்கினி முனம் ஈன்ற 
நயம் தரு சுவாரோசி நவன் உலகம் 
நவை அறக் காக்கும் நாள்"


விளக்கம் :  அக்கினியின் மகனான ஸ்வரோசி எனப்படும் இரண்டாம் மனு அரசுரிமை பெற்று அரசாட்சி செய்தான்.  இதே விபரம் பாகவதம் (சமஸ்கிருதம்) 8-வது காண்டம், முதல் அத்தியாயம், 20-வது ஸ்லோகத்திலும் கூறப்பட்டுள்ளது.  


"மச்சபுராணத்திலே, 195-வது  அத்தியாயத்திலே, அங்கிரஸுவின் கோத்திரத்திலுதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறுமிடத்து அக்கினி என்னும் அரசனைக் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறி,  அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறப்பட்டிருக்கின்றது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்பதற்கு வடமொழி இலக்கணஞ் செய்த பாணினி முனிவரும் "பாண்டிய" வென்னும் மொழிக்குக் காரணத்துடன் பகுப்பிலக்கணம் சொல்லி பாண்டியர் பாண்டுவின் வம்சத்தில் வந்தவரென்று கூறியிருக்கின்றனர்.    (Rev. William Tailor, Pandiya History, Second volume).      


----- xx ----- xx ----- xx -----
நன்றி:முரளி நாயக்கர்

பள்ளிப்பீடமும் பள்ளிக்கட்டிலும் வன்னியரும்

The term "Palli" (பள்ளி) refers to "King".  Moreover, the "Palli Pedam" (பள்ளிப்பீடம்),"Palli Kattil" (பள்ளிக் கட்டிலில்) refers to "King's Throne". 


"மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
பள்ளிப்பிடம் மழவராயனில் எழுந்தருளி
இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)


"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).


"கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
(ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).


"கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
சோழப் பெரும் பள்ளி யாந
அரசகண்டராமப் பெரு பள்ளி
இத்தன்மம்"  (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).
(புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின் சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு).


பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும் பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு குறிப்பிடிகிறது. "பெரும்பள்ளி" என்ற சொல் இறந்தவர்களுடைய சமாதியை (அரசர்களுடையது) குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் அது அந்த பொருளில் அமையாது. மாறாக ஒருவனுடைய பெயராகும். அவன் "வன்னியன்" (சோழன்).


"ஸ்வஸ்திஸ்ரீ கொனெரின் மெகொண்டான்
தென் கவி னாட்டாற்க்கு தங்கள் நாட்டுக்
கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிளிச் சொழப்
பெரும்பள்ளி யாழ்வாற்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு
வேண்டும் நிமன்தங்களுக்கு இவ்வூர்ப் பள்ளி உடையர்கள்
காணியான"
(I.P.S. No.530), (புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டம், திருக்கோகர்ணத்தில், கி.பி. 13-ஆம் நூற்றண்டு, பாண்டியர் காலம்).


பள்ளி பெருநற்கிள்ளி சோழனுக்கு பள்ளி உடையர்கள் நிமந்தங்கள் அளித்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறது.


"ஓதுக்கின்றினி மண புதுப் பூம் பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"
(புறம் 33 : 20 - 22).


நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் ஒவ்வொறு பள்ளி மாடத்திற்கும் சென்று வழிபாடு செய்தான் என்று மேற்குறிப்பிட்ட புறநானுறு பாடல் கூறுகிறது. "பள்ளி மாடம்" என்பது "அரசருடைய சமாதியை" குறிப்பிடுவதாகும்.  எனவே பள்ளி என்பது அரசரைக் குறிப்பிடும் சொல்லாகும். 


இது பற்றி குண்ணம் முனுசுவாமிப் பிள்ளை அவர்கள், 1872-ஆம் ஆண்டு எழுதியுள்ள "ஜாதி சங்கிரஹ சாரம்" என்னும் நூலில் 165-வது பக்கத்தில் குறித்திருப்பது, சேரர் பள்ளி இனத்தை அதாவது வன்னிய இனத்தை சார்ந்தவர் என்பதை நியாயப்படுத்துவதாகக் காணப்படுகிறது. 


இப்போது மகுட வர்த்தனாயிருக்கப்பட்டவரசனும் "பள்ளி" யென்கிற பேரை வகித்திருக்கின்றார்.  அதெப்படி யென்றால் அரசன் கையாளப்பட்ட சர்வமும், அரசன் போக்கு வரத்தையுங் குறித்து அவரூழியக்காரர்களும் மற்றவர்களும் அரசனுடைய பட்டத்துக் குதிரையைப் "பள்ளியினுடைய குதிரை" யென்றும், அரசனேறும் பல்லக்கைப் "பள்ளியினுடைய பல்லக்கு" யென்றும் அரசன் கையாளப்பட்ட பெட்டியைப் "பள்ளியினுடைய பெட்டி" யென்றும், அரசன் படுக்கும் வீட்டைப் "பள்ளியினுடைய அறை" யென்றும், அரசன் வருவதைக் குறித்துப் "பள்ளி வருகிறாரென்றும்", அரசன் போவதைக் குறித்துப் "பள்ளி போகிறாரென்றும்" நாளது வரையில் பேசி வருகின்றனர் என்று எழுதியிருக்கிறார்.  சேர அரசரையும் அவர் பயன்படுத்தும் பொருட்களையும் வன்னியரின் மற்றொரு பெயரான "பள்ளி" என்ற முன்னொட்டோடு அழைப்பதால், சேரர் "வன்னியர்" என்பது முடிபாகும்.   


----- xx ----- xx ----- xx -----
நன்றி: திரு.முரளி நாயக்கர்

கேரள அனந்தபத்மநாபன் பிரம்ம க்ஷத்திரியர்

நாகர்கோயில் திருவிதாங்கோடு செப்பேடு, சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களால் கி.பி. 1748 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.  அவர் "பிரம்ம குல க்ஷத்திரியரான அனந்தபத்மநாபனுக்கு" நிலத்தை தானமாக கொடுத்துள்ளார்கள்.  சேர அரசர் அவர்களின் மிக நெருங்கிய உறவினராகவும் (நம்முடைய உற்ற பெந்துவும்) வலதுகரமாகவும்  "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்கள் விளங்கியுள்ளார்கள்.  சமஸ்கிருதத்தில் "பெந்து" (பந்து சனம்) என்றால் உறவினர் என்பதாகும்.  


சேர அரசர்கள் (கேரள வர்மா அரசர்கள்) "வன்னிய குல க்ஷத்திரியர்கள்" என்பதால் தான் அவர்களுடைய உற்ற உறவினரான  தளபதி அனந்தபத்மநாபன் அவர்களையும் திருவிதாங்கோடு செப்பேடு "பிரம்ம குல க்ஷத்திரியன்" என்று கூறுகிறது.  


இதைப் பற்றி மிகத் தெளிவாக அறியாத சிலர் "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களை "நாடார்" (சாணார்) சமூதாயத்தை சேர்ந்தவர் என்று தவறாக பொருள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருவிதாங்கோடு செப்புப்பட்டயத்தில் வரும்  "பிரம்ம க்ஷத்திரியர்" என்பதையும்  "உற்ற பந்துவையும்"  நாடார் இனத்துடன் பொருத்தி பார்க்காமல் விட்டுவிட்டனர்.  நாடார் இன மக்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே அடிப்படைச் சான்றுகள் கூறும் உண்மையாகும்.   


இக் கருத்துக்கு துணைச் சான்றாக அமைவது அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை கல்வெட்டாகும்.  இக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களை "கச்சி பிரம்ம வன்னியர்" என்று குறிப்பிடுகிறது. உடையார்பாளையம் அரசர்கள் தங்களை ஆவணங்களில் "கச்சி பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்" என்றே குறிப்பிடுகிறார்கள்.  மேலும் அக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களின் உறவினர்களான (பந்து சனம்) "விளந்தை வாண்டையார்களைப்" பற்றிக் குறிப்பிடுகிறது. 


எனவே  சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களும், அவர்களின் உற்ற உறவினரான  "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களும்   "பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்கள்" ஆவார்கள்.  வன்னியர்களான பல்லவ அரசர்களும் தங்களை  "பிரம்ம க்ஷத்திரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். 


----- xx ----- xx ----- xx -----
நன்றி:முரளி நாயக்கர்

சோழர் குலதெய்வம்-வன்னியர் தெய்வம்

கோயில் என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும்.  அது சைவத்தின் தலைமைக் கோவிலாகும்.  63 மூன்று நாயன்மார்களும்  தில்லை நடராஜரையும்,  தில்லை வாழ் அந்தணர்களையும் பற்றி மட்டும் தான் முதலில்  பாடியிருக்கிறார்கள்.   "தன் குல நாயகன் தாண்டவம் பயிலும் தில்லை அம்பலம்" என்று பல மெய்க்கிர்த்திக் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுக்கொண்ட விக்கிரம சோழன் (கி.பி.1118 - 1135) அக் கோயிலில் பல நற்காரியங்களைச் செய்தான்.  


பரகேசரி வர்மனான முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 907 - 955) போரின் வெற்றிமூலம் கிடைத்த ஐந்தாயிரம் கிலோ (Five tons of Gold) பொன்னை தன் குலதெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொற்க்கூறையாக வெய்ந்தான்.  அந்த பொற்க்கூறையில் உள்ள புனிதப்படியான "பஞ்சாக்ஷரப்படியிலே" தான் பண்டைய சோழ வேந்தர்களுக்கு  வலம்புரிச்சங்கால் "திருஅபிஷேகம்" செய்யப் பெற்று ராஜசபையில் "திருமுடிச்சூடப் பெற்றது". பிச்சாவரம் சோழ அரசர்களுக்கும் அப் பண்டைய மரபுப்படியே வலம்புரிச்சங்கால் "திருஅபிஷேகம்" செய்யப் பெற்று ராஜசபையில் "திருமுடிச்சூடப் பெற்றது".  அந்த புனிதப் படியினிலே தான் மாணிக்கவாசகர் அருளிச் செய்த "திருவாசகமும்", சேக்கிழார் அருளியச் செய்த "பெரியபுராணமும்" வைக்கப்பெற்று அரங்கேற்றப்பட்டது.  


கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) "திருவிசைப்பா" என்ற திருப்பதிகம் ஒன்றை தன் குல நாயகன் மீது பாடினார். அத்  திருப்பாவில் தன்னை "கோழிவேந்தன்" எனவும் "தஞ்சையர் கோன்" எனவும் அழைத்துக்கொள்கிறார்.  அது :-


"சீரான் மல்கு தில்லைச் செம்பொன்னம் பலத்தாடி தன்னைக் 
காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த 
ஆராவின் சொற்கண்ட ராதித்தன் அருந்தமிழ்மாலை வல்லார் 
பேராவுலகில் பெருமையோடு பேரின்பம் எய்துவரே"         


கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயிலில், சோழ வேந்தன் கண்டராதித்த சோழன் தன் குல நாயகனை வணங்கும் சிற்பம் உள்ளது.  


கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயிலில், சோழ வேந்தன்  உத்தம சோழன் (கி.பி. 973 - 985) தன் குல நாயகனை வணங்கும் சிற்பம் உள்ளது. 


முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985 - 1012) தான் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் தன்னுடைய "குல தெய்வக் கடவுளான சிதம்பரம் நடராஜருக்கு" பல சிறப்புகளைச் செய்தான்.


அவன் "ஆடல் வல்லானை" வணங்குவது போல சிற்பம் ஒன்றை தஞ்சை பெரிய கோவிலில் வைத்துள்ளான்.


அவன் "தன் குல நாயகனை வழிபடுவது" போல ஓவியம் ஒன்றை தஞ்சை பெரிய கோவிலில் வரைந்துள்ளான்.


அவன், பொன்னின் எடை அறியப் பயன்படுத்தும் எடைக்கல்லின் பெயரைக்கூட "ஆடவல்லான் எடைக்கல்" என்று பெயரிட்டுள்ளான்.


அவன், நெல் அளக்கும் மரக்காலையும் "ஆடவல்லான் மரக்கால்" என்று பெயரிட்டுள்ளான்.


இப்படி தன் குல நாயகனிடம் பேரன்புக்கொண்ட "ராஜ ராஜ சோழன்" எப்படி "அரண்மனையில் திருமுடிசூடியிருக்கமுடியும்". அவன் தனது குல தெய்வக் கோயிலான தில்லை நடராஜர் கோயிலில் தான் திருமுடிசூடியிருக்கிறான் என்பதே உண்மையாகும்.  


சோழ மன்னர்கள் எந்த பண்டைய மரபுப்படி தன் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமுடிசூடினார்களோ அதே பண்டைய மரபுப்படி அங்கே பிச்சாவரம் சோழர்களும் திருமுடிசூடுகிறார்கள்.  


இத் திருமுடிச்சூடும் பண்டைய மரபை தில்லை வாழ் அந்தணர்கள் சோழ மன்னர்களுக்கு இன்றும் தொடர்ந்து செய்கிறார்கள்.  சோழ மன்னர்களுக்கு அன்றி வேறு யாருக்கும் திருமுடிச்சூடமாட்டோம் என்று சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.  அது :-    


"செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி"    


தில்லையில் திருமுடிச்சூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1133 - 1150) சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தை தில்லை நடராஜர் கோவிலில் அரங்கேற்றினான்.  அப்பொழுது சிறுவனாக இருந்த அவன் மகனான இரண்டாம் ராஜ ராஜ சோழன் (கி.பி.1146 - 1163) தான் ஆட்சிக்கு வந்தவுடன் பெரியபுராணத்தின் மேல் இருந்த பற்றின் காரணமாக தான் எடுப்பித்த உலகப்புகழ் பெற்ற "தராசுரம் கோயிலில்" சேக்கிழாரின் ஆசியுடன் 63 நாயன்மார்களின் சிற்பத்தை "கதை சொல்லும் வடிவமாக" கோயிலில் செதுக்கியுள்ளான். அச் சிற்பங்களுக்கு பெயர்களும் கொடுத்துள்ளான்.


அச் சிற்பங்களின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இன்று நமக்கு கிடைக்கும் பெரியபுராணம் புத்தகம் எந்த வரிசைப்படி (63 நாயன்மார்களின் பெயர்கள்) கிடக்கிறதோ அதே வரிசையிலேயே 63 நாயன்மார்களின் சிற்பங்களும் தராசுரம் கோயிலில் இடம்பெற்றிருக்கிறது.  எனவே புலவர் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் என்பது "சோழர்கள் காலத்து வரலாற்று அடிப்படை  நூலாகும்".


இந்த வரலாற்று சிறப்புமிக்க "பெரியபுராணத்தை" ஸ்ரீநிவாஸகவி என்பவர்  சமஸ்கிருதத்தில் "சிவபக்தவிலாசம்" என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் என்பதை காஞ்சிபுரம் எக்கம்பரநாதர் கோயிலில் உள்ள கி.பி.1532 ஆம் ஆண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. இன்று நமக்கு கிடைக்கும் "சிவபக்தவிலாசம்" என்பது  அப்படியே பெரியபுராணத்தின் அச்சாகும்.  எனவே பெரியபுராணம் என்பது ஒரு முழுமையான "வரலாற்று நூல்" ஆகும்.


இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க பெரியபுராணத்தில் குறிப்பிடும் வாசகம் தான் :- 


"செம்பியர்தம் தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி"    


இந்த தர்மத்தை தில்லை வாழ் அந்தணர்கள் இன்றும்  கடைபிடிப்பது சோழர்களின் வரலாற்றுக்கு ஒரு மணிமகுடமாகும்.  எனவே வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பிச்சாவரம் சோழ அரசர்களே பண்டைய சோழ வேந்தர்களின் மரபினர்கள் என்பது மேற்குறிப்பிட்ட அடிப்படைச் சான்றுகள் மூலம் உறுதியாகிறது. 

                      
வாழ்க பிச்சாவரம் சோழ அரசர்களின் புகழ். 

திருவக்கரை மழவராயர் வன்னியர்

மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது.  "மழவர் பெருமகன் அதியமான்" நாடான  தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது.  மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில்  "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய  "செம்பியன் மாதேவி"  ஆவாள்.   பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.  


அரியலூர் மாவட்டம், திட்டக்குடி கல்வெட்டு மழவர்களுடைய  (வன்னியர்)  எல்லைகளை எடுத்துச் சொல்கிறது. "வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்க்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொரும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக"  (Line 9 & 10 of the Tittakudi Inscription, Mara Varman Parakkrama Pandiyan , 1338 A.D).


"இன்னாயநாற்க்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலாவது முதல் வில்லுக்குகொரு பணமாக"  (Line 14 of the Tittakudi Inscription).  "இப்படி சம்மதித்து சன்டிராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்"  (Line 16 of the Tittakudi Inscription).         மேற்குறிப்பிட்ட கி.பி. 14-ஆம் நூற்றாண்டின்  கல்வெட்டில் இருந்து மழ நாட்டின் எல்லைகள் (180 Kms approximate) தெரியவருகிறது.  அம் மழநாட்டின் எல்லைகளுள் "திருவக்கரையும்" ஒன்றாகும்.  


வன்னிய அரசர்களான அரியலூர் மழவராயர்களைப் போல திருவக்கரையிலும் வன்னிய சமூகத்து "மழவராய அரசர்கள்"   கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள் :-


திருவக்கரை உடைய நயினார் ஸ்ரீ பண்டாரத்தாரும்  (1515 A.D)

எங்குமாய் நின்றார் மழவராயர்   (1526 A.D)

திருத்தாண்டவமுடைய மழவராயர் (1531 A. D)

நயினார் வசவப்ப மழவராயர்  (17th century A.D)

திருவக்கரை சிதம்பர மழவராயர் (17th century A.D)

திருவக்கரை வல்லவ நாட்டு மழவராய பண்டாரத்தார்
(வன்னியர் வில்லியனூர் செப்பேடு, கி.பி.1641).    


இது வன்னியர்களுக்கு ஒரு புதிய அரசமரபினர்களைப் பற்றிய செய்தியாகும்.  

=================================================
நன்றி:முரளி நாயக்கர்

கொங்கரையர் வன்னியர்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள  "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-


"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"


இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள் குறிப்பாக "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.  


ஆனால் அது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே  "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 05/2004, லில் இருந்து நமக்கு தெளிவாக தெரியவருகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்).  


"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"     


இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.  மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.


எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது.  "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும்.  அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும். 


மேலும் கள்ளர் சமூகத்தவர்களான  "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தென்னிந்திய கல்வெட்டு தொகுதியில் (S.I.I. Vol-XIII)  இருந்து குறிப்பிடுவதும் தவறானதாகும்.  சில கல்வெட்டுகள் "பெரும்பிடுகு முத்தரைய மன்னரை" குறிப்பதாகும். அதே போல தருமபுரி கல்வெட்டும் "ஒருவருடைய பெயரையே" அது தெரிவிக்கிறது.   

பள்ளி வேளான்

திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது.  இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது.  இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.


இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்".  இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது.  இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது. பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது.  முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர்.  பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இப் "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்), வன்னிய குல க்ஷத்திரிய மரபினை சேர்ந்தவர்கள் ஆவர்.         


கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது.  இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன்.  இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.    


இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-


"பள்ளி வேளான்"

"பராந்தக வேளான்"

"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"

"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" 

(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)


இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன்.  இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.          


"பள்ளி வேளானின்" மகன்  "பராந்தக வேளான்" என்பவன் சோழநாட்டில் உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணனுக்கு (கி.பி. 768 - 815) வெற்றியைத் தேடித் தந்தவன்.  இப்போர் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் நடைபெற்ற போராகும்.  இப்போரில் பங்கு கொண்ட "பராந்தக வேளானின்" மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன்.  இம்மன்னனுக்காக இடவை, குடமூக்கு (கும்பகோணம்) முதலிய இடங்களில் பல்லவர்களோடு நடைபெற்ற போர்களில் பங்கு கொண்டவன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஆவான்.  மேலும் இவன் ஆய்வேள் என்ற மலைநாட்டு மன்னருடன் விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் பாண்டியன் நடத்திய போரில் படைத்தலைவனாகக் கலந்துகொண்டான் என்று பெரும்புள்ளி கல்வெட்டு கூறுகிறது.  விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினம் இன்று அரபிக்கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.              
                        

"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனின்" மகன் "பள்ளி வேளான் நக்கம்புள்ளன்" ஆவான்.  இவன் இரண்டாம் வரகுணன் சிங்கள மன்னருடன் சாளக்கிராமம், சென்னிலம் முதலிய இடங்களில் நடத்திய போர்களில் யானைப்படையைக் கொண்டு சென்று உதவி வெற்றியைத் தேடித் தந்தவன் என்று பல அறிய செய்திகளைப் பெரும்புள்ளிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.  


"பள்ளிவேளான் நக்கன்புள்ளனும்" அவன்  மகன்  "புள்ளன் நக்கனும்" இவ்விருவரும்  சேர்ந்தே  வடமதுரைக்கு அருகிலுள்ள இராமநாதபுரத்தில் நீர்ப்பாசன ஏரி ஒன்றை உருவாக்கி அதற்குப் புள்ளனேரி என்றே பெயரிட்டனர். ஏரியை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட தச்சனுக்குச் காணியாகப் "பள்ளி நாட்டின்" இரண்டு பகுதிகளிலுமுள்ள ஊர்குளங்களிலிருந்து தலைநீர் பாயும் பதக்கு விதைநெல்பாவும் நிலம் அளிக்கப்பட்டது என்று  இராமநாதபுரம் வரகுணபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது.    


வேடசந்தூர் வட்டம் பழைய கரட்டுப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயில் அருகில் இரண்டாக உடைந்து போன கி.பி.10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று உள்ளது :-


"ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான 
மதுராந்தகப் பள்ளி வேளான்
பள்ளி நாட்டு நிரை போகயில் பட்டான்"   (கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40).


பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்தான். அவன் தன்னை "அரசபள்ளி கோத்திரம்" என்று அழைத்து கொண்டிருக்கிறான்.  வேடசந்தூர் பகுதியில் பிற்கால "பள்ளி வேளான்" கல்வெட்டுகள் காணப்படுகிறது.   


"பள்ளி வேளான்கள்" பாண்டிய மன்னர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் மேற்கொண்ட பல போர்களில் இவர்கள்  தளபதிகளாக இருந்து பெரும் வெற்றியை அவர்களுக்கு தேடித்தந்துள்ளனர்.  மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் உள்ள  கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று "பள்ளி தறையன்" என்பவனை பற்றி குறிப்பிடுகிறது.  அவன் "பள்ளி வேளான்களின்" உறவினனாக இருக்ககூடும்.                

            
எறியோடு கோணக்க முத்துவல்லக் கொண்டம நாயக்கர் காலத்தில் பெரும்பள்ளியில் கோட்டை ஒன்று இருந்தது இதனை முத்துவல்ல கொண்டம நாயக்கர் சண்டையிட்டுக் கைப்பற்றி விரிவுபடுத்தி ஆண்டார் என்று "எறியோடு பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது.  அவர் கைப்பற்றிய கோட்டை "பள்ளி வேளான்களின்" கோட்டையாகும்.   

-----x-----x-----x-----
நன்றி:திரு.முரளி நாயகர்