மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது. "மழவர் பெருமகன் அதியமான்" நாடான தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது. மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில் "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய "செம்பியன் மாதேவி" ஆவாள். பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டம், திட்டக்குடி கல்வெட்டு மழவர்களுடைய (வன்னியர்) எல்லைகளை எடுத்துச் சொல்கிறது. "வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்க்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொரும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக" (Line 9 & 10 of the Tittakudi Inscription, Mara Varman Parakkrama Pandiyan , 1338 A.D).
"இன்னாயநாற்க்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலாவது முதல் வில்லுக்குகொரு பணமாக" (Line 14 of the Tittakudi Inscription). "இப்படி சம்மதித்து சன்டிராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்" (Line 16 of the Tittakudi Inscription). மேற்குறிப்பிட்ட கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டில் இருந்து மழ நாட்டின் எல்லைகள் (180 Kms approximate) தெரியவருகிறது. அம் மழநாட்டின் எல்லைகளுள் "திருவக்கரையும்" ஒன்றாகும்.
வன்னிய அரசர்களான அரியலூர் மழவராயர்களைப் போல திருவக்கரையிலும் வன்னிய சமூகத்து "மழவராய அரசர்கள்" கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள் :-
திருவக்கரை உடைய நயினார் ஸ்ரீ பண்டாரத்தாரும் (1515 A.D)
எங்குமாய் நின்றார் மழவராயர் (1526 A.D)
திருத்தாண்டவமுடைய மழவராயர் (1531 A. D)
நயினார் வசவப்ப மழவராயர் (17th century A.D)
திருவக்கரை சிதம்பர மழவராயர் (17th century A.D)
திருவக்கரை வல்லவ நாட்டு மழவராய பண்டாரத்தார்
(வன்னியர் வில்லியனூர் செப்பேடு, கி.பி.1641).
இது வன்னியர்களுக்கு ஒரு புதிய அரசமரபினர்களைப் பற்றிய செய்தியாகும்.
=================================================
நன்றி:முரளி நாயக்கர்
அரியலூர் மாவட்டம், திட்டக்குடி கல்வெட்டு மழவர்களுடைய (வன்னியர்) எல்லைகளை எடுத்துச் சொல்கிறது. "வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்க்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொரும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக" (Line 9 & 10 of the Tittakudi Inscription, Mara Varman Parakkrama Pandiyan , 1338 A.D).
"இன்னாயநாற்க்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலாவது முதல் வில்லுக்குகொரு பணமாக" (Line 14 of the Tittakudi Inscription). "இப்படி சம்மதித்து சன்டிராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்" (Line 16 of the Tittakudi Inscription). மேற்குறிப்பிட்ட கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டில் இருந்து மழ நாட்டின் எல்லைகள் (180 Kms approximate) தெரியவருகிறது. அம் மழநாட்டின் எல்லைகளுள் "திருவக்கரையும்" ஒன்றாகும்.
வன்னிய அரசர்களான அரியலூர் மழவராயர்களைப் போல திருவக்கரையிலும் வன்னிய சமூகத்து "மழவராய அரசர்கள்" கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள் :-
திருவக்கரை உடைய நயினார் ஸ்ரீ பண்டாரத்தாரும் (1515 A.D)
எங்குமாய் நின்றார் மழவராயர் (1526 A.D)
திருத்தாண்டவமுடைய மழவராயர் (1531 A. D)
நயினார் வசவப்ப மழவராயர் (17th century A.D)
திருவக்கரை சிதம்பர மழவராயர் (17th century A.D)
திருவக்கரை வல்லவ நாட்டு மழவராய பண்டாரத்தார்
(வன்னியர் வில்லியனூர் செப்பேடு, கி.பி.1641).
இது வன்னியர்களுக்கு ஒரு புதிய அரசமரபினர்களைப் பற்றிய செய்தியாகும்.
=================================================
நன்றி:முரளி நாயக்கர்