Thursday, 15 September 2016

பழுவேட்டரையர் வன்னியர்

பழுவேட்டரைய அரசர்கள் பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

பழுவேட்டரையர்களை "கேரள அரசர்கள்" என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.  இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர். (1 & 2).

சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் "மழவர்குடியை" சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.(3) பழுவேட்டரையர்களும் தங்களை "மழவர்" ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று "மழவர் கொங்கணி சென்னி நம்பி" என்பாரைக் கிழப்பழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.(4) அது :-

"பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
மாமடிகள் மழவர் கொங்கணி
செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று"

பிற்காலச் சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை "சேரர்குடியை" சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை "கேரள அரசர்கள்" என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.(5) அது :-

"ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா"
"ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி"

மேலும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், புங்கனூருக்கு அருகே உள்ள லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் இருக்கும் கல்வெட்டு, விடுகாதழகிய பெருமாள் "சேர அரசன் அதிகேந்திர வ்யாமுக்த ச்ரவனேஸ்வரன்" என்றும் "திருமால் போன்ற அவன் வடதிசைக்குச் சென்று தன்னுடைய சின்னமான வில்லை பொறித்தான்" என்றும் தெரிவிக்கின்றது.  அக் கோயிலில் பல இடங்களில் தன் குலச் சின்னமான "வில்" லினை மேடையில் அமர்த்தி அதன் இருபுறங்களிலும் சாமரம் வீசுவது போலவும், அவ் "வில்லின்" சிற்பத்தின் மீது வெண்கொற்றக்குடையையும், விடுகாதழகிய பெருமான் பொறித்துள்ளான்.  இதன் மூலம் "அதியமான்கள்" சேரர்களின் வழித்தோன்றல்கள் என்பது முடிவாகிறது.          

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடூர் அதியரையன்" (ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாதழகிய பெருமாளான சேரமான் பெருமாளேந்) என்றும் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்றும் அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் "வன்னிய மரபினர்" என்று பெறப்படுகிறது.

பழுவேட்டரையர்களும் தங்களை "கேரள அரசர்கள்" என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் "மழவர் குடியை" சார்ந்த "சேர குல வன்னியர்கள்" என்று நிறுவப்படுகிறது. "சேரர்கள்" அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

"கேரள அரசர்கள்" என்பதும் "சேர அரசர்கள்" என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.(7)

பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த "சேரமானாரின்" கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் "கொல்லிப்பெரியான்" என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் "சேரமானாரின்" மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.(8)

சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் "கொல்லிப்பெரியான்" (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் "மழவர் குடியை" சார்ந்த "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதும் தெரியவருகிறது.

தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த "அரியலூர் மழவராயர்களே", "மழவர் குடி" வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த "வன்னிச் செய்" என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.(9)

பழுவேட்டரையர்கள் "வன்னியர்கள்" என்பதால்தான் "வன்னிச் செய்" என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர்.


அடிக்குறிப்புகள் :
===============

(1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8.
(He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala)

(2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12.

(Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala
Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya
(Ep. Ind. Vol-XV, P-50). By "Kerala Prince" should be meant a relation of the
Chera King).

(3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா
மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006.

(4) S.I.I. Vol-XIX, No.237, page-122.

(5) S.I.I. Vol-I, No.75, Page-106.

(6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை,
Year-2007.

"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"

(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).        

மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் அதியமான் மன்னர்கள் தங்களை  "பள்ளி" என்று குறிப்பிட்டுள்ளனர் :-

"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "

என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள்.  அது, "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில்  (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள்.  எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர். 


(7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a
descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of
Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106).

(8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243.

(9) S.I.I. Vol-XIX, No.406, page-214.

-x-x-x-