The term "Palli" (பள்ளி) refers to "King". Moreover, the "Palli Pedam" (பள்ளிப்பீடம்),"Palli Kattil" (பள்ளிக் கட்டிலில்) refers to "King's Throne".
"மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
பள்ளிப்பிடம் மழவராயனில் எழுந்தருளி
இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)
"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).
"கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
(ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).
"கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
சோழப் பெரும் பள்ளி யாந
அரசகண்டராமப் பெரு பள்ளி
இத்தன்மம்" (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).
(புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின் சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு).
பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும் பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு குறிப்பிடிகிறது. "பெரும்பள்ளி" என்ற சொல் இறந்தவர்களுடைய சமாதியை (அரசர்களுடையது) குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் அது அந்த பொருளில் அமையாது. மாறாக ஒருவனுடைய பெயராகும். அவன் "வன்னியன்" (சோழன்).
"ஸ்வஸ்திஸ்ரீ கொனெரின் மெகொண்டான்
தென் கவி னாட்டாற்க்கு தங்கள் நாட்டுக்
கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிளிச் சொழப்
பெரும்பள்ளி யாழ்வாற்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு
வேண்டும் நிமன்தங்களுக்கு இவ்வூர்ப் பள்ளி உடையர்கள்
காணியான"
(I.P.S. No.530), (புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டம், திருக்கோகர்ணத்தில், கி.பி. 13-ஆம் நூற்றண்டு, பாண்டியர் காலம்).
பள்ளி பெருநற்கிள்ளி சோழனுக்கு பள்ளி உடையர்கள் நிமந்தங்கள் அளித்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறது.
"ஓதுக்கின்றினி மண புதுப் பூம் பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"
(புறம் 33 : 20 - 22).
நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் ஒவ்வொறு பள்ளி மாடத்திற்கும் சென்று வழிபாடு செய்தான் என்று மேற்குறிப்பிட்ட புறநானுறு பாடல் கூறுகிறது. "பள்ளி மாடம்" என்பது "அரசருடைய சமாதியை" குறிப்பிடுவதாகும். எனவே பள்ளி என்பது அரசரைக் குறிப்பிடும் சொல்லாகும்.
இது பற்றி குண்ணம் முனுசுவாமிப் பிள்ளை அவர்கள், 1872-ஆம் ஆண்டு எழுதியுள்ள "ஜாதி சங்கிரஹ சாரம்" என்னும் நூலில் 165-வது பக்கத்தில் குறித்திருப்பது, சேரர் பள்ளி இனத்தை அதாவது வன்னிய இனத்தை சார்ந்தவர் என்பதை நியாயப்படுத்துவதாகக் காணப்படுகிறது.
இப்போது மகுட வர்த்தனாயிருக்கப்பட்டவரசனும் "பள்ளி" யென்கிற பேரை வகித்திருக்கின்றார். அதெப்படி யென்றால் அரசன் கையாளப்பட்ட சர்வமும், அரசன் போக்கு வரத்தையுங் குறித்து அவரூழியக்காரர்களும் மற்றவர்களும் அரசனுடைய பட்டத்துக் குதிரையைப் "பள்ளியினுடைய குதிரை" யென்றும், அரசனேறும் பல்லக்கைப் "பள்ளியினுடைய பல்லக்கு" யென்றும் அரசன் கையாளப்பட்ட பெட்டியைப் "பள்ளியினுடைய பெட்டி" யென்றும், அரசன் படுக்கும் வீட்டைப் "பள்ளியினுடைய அறை" யென்றும், அரசன் வருவதைக் குறித்துப் "பள்ளி வருகிறாரென்றும்", அரசன் போவதைக் குறித்துப் "பள்ளி போகிறாரென்றும்" நாளது வரையில் பேசி வருகின்றனர் என்று எழுதியிருக்கிறார். சேர அரசரையும் அவர் பயன்படுத்தும் பொருட்களையும் வன்னியரின் மற்றொரு பெயரான "பள்ளி" என்ற முன்னொட்டோடு அழைப்பதால், சேரர் "வன்னியர்" என்பது முடிபாகும்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி: திரு.முரளி நாயக்கர்
"மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
பள்ளிப்பிடம் மழவராயனில் எழுந்தருளி
இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)
"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).
"கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
(ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).
"கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
சோழப் பெரும் பள்ளி யாந
அரசகண்டராமப் பெரு பள்ளி
இத்தன்மம்" (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).
(புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின் சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு).
பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும் பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு குறிப்பிடிகிறது. "பெரும்பள்ளி" என்ற சொல் இறந்தவர்களுடைய சமாதியை (அரசர்களுடையது) குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் அது அந்த பொருளில் அமையாது. மாறாக ஒருவனுடைய பெயராகும். அவன் "வன்னியன்" (சோழன்).
"ஸ்வஸ்திஸ்ரீ கொனெரின் மெகொண்டான்
தென் கவி னாட்டாற்க்கு தங்கள் நாட்டுக்
கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிளிச் சொழப்
பெரும்பள்ளி யாழ்வாற்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு
வேண்டும் நிமன்தங்களுக்கு இவ்வூர்ப் பள்ளி உடையர்கள்
காணியான"
(I.P.S. No.530), (புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டம், திருக்கோகர்ணத்தில், கி.பி. 13-ஆம் நூற்றண்டு, பாண்டியர் காலம்).
பள்ளி பெருநற்கிள்ளி சோழனுக்கு பள்ளி உடையர்கள் நிமந்தங்கள் அளித்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறது.
"ஓதுக்கின்றினி மண புதுப் பூம் பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"
(புறம் 33 : 20 - 22).
நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் ஒவ்வொறு பள்ளி மாடத்திற்கும் சென்று வழிபாடு செய்தான் என்று மேற்குறிப்பிட்ட புறநானுறு பாடல் கூறுகிறது. "பள்ளி மாடம்" என்பது "அரசருடைய சமாதியை" குறிப்பிடுவதாகும். எனவே பள்ளி என்பது அரசரைக் குறிப்பிடும் சொல்லாகும்.
இது பற்றி குண்ணம் முனுசுவாமிப் பிள்ளை அவர்கள், 1872-ஆம் ஆண்டு எழுதியுள்ள "ஜாதி சங்கிரஹ சாரம்" என்னும் நூலில் 165-வது பக்கத்தில் குறித்திருப்பது, சேரர் பள்ளி இனத்தை அதாவது வன்னிய இனத்தை சார்ந்தவர் என்பதை நியாயப்படுத்துவதாகக் காணப்படுகிறது.
இப்போது மகுட வர்த்தனாயிருக்கப்பட்டவரசனும் "பள்ளி" யென்கிற பேரை வகித்திருக்கின்றார். அதெப்படி யென்றால் அரசன் கையாளப்பட்ட சர்வமும், அரசன் போக்கு வரத்தையுங் குறித்து அவரூழியக்காரர்களும் மற்றவர்களும் அரசனுடைய பட்டத்துக் குதிரையைப் "பள்ளியினுடைய குதிரை" யென்றும், அரசனேறும் பல்லக்கைப் "பள்ளியினுடைய பல்லக்கு" யென்றும் அரசன் கையாளப்பட்ட பெட்டியைப் "பள்ளியினுடைய பெட்டி" யென்றும், அரசன் படுக்கும் வீட்டைப் "பள்ளியினுடைய அறை" யென்றும், அரசன் வருவதைக் குறித்துப் "பள்ளி வருகிறாரென்றும்", அரசன் போவதைக் குறித்துப் "பள்ளி போகிறாரென்றும்" நாளது வரையில் பேசி வருகின்றனர் என்று எழுதியிருக்கிறார். சேர அரசரையும் அவர் பயன்படுத்தும் பொருட்களையும் வன்னியரின் மற்றொரு பெயரான "பள்ளி" என்ற முன்னொட்டோடு அழைப்பதால், சேரர் "வன்னியர்" என்பது முடிபாகும்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி: திரு.முரளி நாயக்கர்