Thursday, 15 September 2016

வன்னாடு உடையார் வன்னியர்கள்

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில் வன்னாடுடையார்கள் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர்.


பிற்காலச் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக திகழ்ந்த கிழ் கண்ட வன்னாடுடைய அரசர்களைப் பற்றி தெரியவருகிறது :-


"வன்னாடுடையான் தூங்கானை மறவன்"

"வன்னாடுடையார் அக்கோ புகழரையர்"

"தூங்கானை மறவன்"

"வன்னாடுடையான் இலாடராயன்"

"வன்னாடுடையான் தூங்கவன் வீரட்டார்"

"மறவன் தூங்கானான பிராந்தக வன்னாடுடையான்"

"விஜயராஜேந்திர வன்னாடுடையான்"

"வன்னாடுடையான் சிறுபாக்கமுடையான் நாயன் ராஜ ராஜ
தேவனான ராஜாதி ராஜ மகதை நாடாழ்வான்"

"ராஜ ராஜ வன்னாடுடையான்"

"வந்நாடு காணி உடைய சுத்தமல்லனான ஜெயம்கொண்ட சோழ வன்னாடுடையன்" போன்றோர் ஆவர்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் ஊர்த் தெருவில் நடப்பெற்றுள்ள, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1188) கல்வெட்டை, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் கல்வெட்டு வன்னாடுடையார்களைப் பற்றி தெரிவிக்கிறது :-


"பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசத்தை இராஜ ராஜ வன்னாடுடையார் அவர்கள், "வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன்" உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்களுக்கு) காணியாக வழங்கியுள்ளார்கள். பிறகு இவ்வூரை மூன்றாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் "திருவையாறுடையான் கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்", நத்தமான் உடையாரில் "நாந... வன்னாடுடையானும்" வாங்கியுள்ளார்கள். இவர்கள் வாங்கிய பிரம்மதேச ஊரை, பிரம்மதேசமுடையப் பள்ளிகளான (வன்னியர்களான) :


"நாட்டரையனுக்கும்",

"புலியன் மாதனான மகதை நாட்டு பேரையனுக்கும்",

"புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானுக்கும்",

"புலியனான திக்கும் சாத்தன் பெரியானுக்கும்",

"சோமன் புலியனுக்கும்"


இவர்கள் (வன்னியர்கள்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர பிராமணர் முதல் வெள்ளாளர் உள்ளிட்டார்களுக்கும் பள்ளிக்கும் (கோயிலுக்கும்) விற்பதில்லை என்று கல்வெட்டில் தெரிவித்து கையெப்பம் இட்டுள்ளனர். கையெப்பம் இட்டவர்கள் :-


"மகதை நாட்டு பேரையன் புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானும்" (வன்னியர்),

"கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்",

"இராச ராச வன்னாடுடையானும்". ஆவார்கள்.


துளுவ வேளாளர் சமூகத்தை சார்ந்த முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் இக் கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள் :-


"இவ்வூர் நில காணிகளை குறிப்பிட்ட சில பள்ளி (வன்னியர்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர பிராமணர், வெள்ளாளர் மற்றும் பள்ளிகள் ஆகியோர்களுக்கு விற்பதில்லை என்று கல்வெட்டு தெரிவிப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்".


ஆனால் அது தவறாகும். கல்வெட்டில் குறிப்பிடப்படுவது என்னவென்றால், "பிரம்மதேச நில காணிகளை, வன்னாடு உடையார் ராஜ வம்சத்தை சார்ந்த வன்னியர்களுக்கும் மற்றும் நத்தமான் உடையார்களுக்கும் தவிர பிராமணர் முதல் வெள்ளாளர் உள்ளிட்டார்களுக்கும், கோயிலுக்கும் (பள்ளிக்கும்) விற்கக்கூடாது என்று தான் கல்வெட்டு தெரிவிக்கிறது".


"பள்ளிகள்" என்று இக் கல்வெட்டில் வந்தால் அது "வன்னியர்களை" குறிப்பிடும். மாறாக "பள்ளிக்கும்" என்று ஒருமையில் வந்துள்ளது. எனவே "பள்ளிக்கும்" என்பது "கோவிலுக்கும்" என்ற பொருளில் தான் இக் கல்வெட்டில் நிச்சயம் வரும்.


இக் கல்வெட்டின் மூலம் தெரியவரும் கருத்து என்னவென்றால் :


"வன்னாடுடையார் ராஜ வம்சத்தை சார்ந்த மன்னர்கள், வன்னியர்களும் மற்றும் நத்தமான் உடையார்களும்" ஆவார்கள்.


வன்னியர்கள், சுருதிமான்கள் மற்றும் நத்தமான்கள் அனைவரும் "வேள்வி தீயில் பிறந்த க்ஷத்திரியர்கள்" ஆவார்கள்.