Thursday, 15 September 2016

கொங்கரையர் வன்னியர்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள  "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-


"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"


இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள் குறிப்பாக "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.  


ஆனால் அது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே  "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 05/2004, லில் இருந்து நமக்கு தெளிவாக தெரியவருகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்).  


"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"     


இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.  மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.


எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது.  "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும்.  அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும். 


மேலும் கள்ளர் சமூகத்தவர்களான  "படியான் அம்பலம்", "நெடுவை அருண்" போன்றவர்கள் தங்களது வம்சத்தவர்களாக தென்னிந்திய கல்வெட்டு தொகுதியில் (S.I.I. Vol-XIII)  இருந்து குறிப்பிடுவதும் தவறானதாகும்.  சில கல்வெட்டுகள் "பெரும்பிடுகு முத்தரைய மன்னரை" குறிப்பதாகும். அதே போல தருமபுரி கல்வெட்டும் "ஒருவருடைய பெயரையே" அது தெரிவிக்கிறது.